1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (05:44 IST)

இனிமேலாவது திருந்துங்கள்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ்

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். இந்த வெற்றியை பாகிஸ்தானியர்கள் விடிய விடிய கொண்டாடினர். இதுவரை பெற்ற தோல்விகளுக்கு ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுங்கள் என்ற இம்ரான்கானின் சவாலை ஏற்று அதை நடத்தியும் காட்டிவிட்டனர் பாகிஸ்தான் அணியினர்



 


நேற்றைய வெற்றியில் முக்கிய பங்கு கேப்டன் சர்பராஸ்ஸுக்கு உண்டு என்றால் அது மிகையில் இந்த நிலையில் வெற்றி பெற்றவுடன் கேப்டன் சர்பராஸ் கூறியதாவது: இந்த வெற்றி இன்று மற்றும் நாளை நினைவு கூரத்தக்கது அல்ல. பல வருடங்கள் கொண்டாடத்தக்கது. பாகிஸ்தானில் கிரிக்கெட் இருக்கும் வரை இந்த சாதனை இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

நீண்ட நாட்களாக நாங்கள் துபாயை தான் ஹோம் கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். மற்ற அணிகளை போல் சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றி மூலம் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என இனியாவது முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறினார்