செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (01:29 IST)

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

மனைவியை 2000 ரூபாவிற்கு விற்ற கணவர்

இலங்கை, பொல்பித்திகம மொரகொல்லாகம பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையால், அக்கணவர் தன் மனைவியை, தன் நண்பர் ஒருவருக்கு 2000 ரூபாவிற்கு விற்றுள்ளார்.


 


அப்பெண்ணும் கணவரின் நண்பருடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளார். இதை அடுத்து, கணவரின் நண்பருடன் இல்லற வாழ்கையை வாழ்ந்து வந்த அப்பெண்ணிற்கு, அவரோடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அப்பெண் தனது உயிருக்கு அச்சுறத்தல் என இரு கணவர்கள் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.