1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (14:02 IST)

”இந்த பூமி மட்டுமே நமக்கானது”… நாசா வெளியிட்ட பூமியின் அழகான புகைப்படங்கள்

நமது பூமி பந்தை விண்வெளி மையத்தில் இருந்து பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளது நாசா.

விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நமது பூமியை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு வியப்பாகவும் பூமி பந்தின் அழகை வெளிக்கொண்டு வருவது போலும் அமைந்துள்ளது.

இது குறித்து நாசா பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில், “இந்த பூமி மிகவும் ஸ்பெஷலானது. இந்த பிரபஞ்சத்திலேயே நமது வாழ்க்கை இந்த பூமி மட்டுந்தான். எங்கள் ஆராய்ச்சி குழுவினர் நமது பூமி பந்தின்  புகைப்படங்களை நாம் பார்த்து நமது பூமியின் அழகை கொண்டாடுவோம்” என தெரிவித்துள்ளது.

நமது உலகம் மிகவும் அழகானது. இதை விட்டால் நமக்கு இந்த பிரபஞ்சத்தில் வேறு போக்கிடம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அந்த புகைப்படங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.