1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (17:59 IST)

வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி !

shot
அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாநிலத்தில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் இண்டியானா மாநிலம் கிரின்வுக்ட் நகரில், கிரீன்வுட் பார்க் மால் என்ற ஒரு வணிக வளாகம் இயங்கி வருகிறது.

இங்குள்ள உணவகத்தில்  நேற்று மாலை  கையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்ம நபர், திடீரென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

இதில், 3 பேர் கொல்லப்பட்டனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது, அங்கு நின்றுந்த ஒருவர் தன் கையில் இருந்த துப்பாக்கியால், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக் கொன்றார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.