1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (12:08 IST)

11 லட்சம் காலாவதியான தடுப்பூசிகள்: மொத்தமாக அழிக்க உத்தரவு!

vaccines
11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதாகவும் அதனை அடுத்து அவை அனைத்தையும் மொத்தமாக அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் பல நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை டென்மார்க் அரசு  இறக்குமதி செய்தது
 
 இந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் 11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அனைத்து தடுப்பூசிகளையும் அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
டென்மார்க் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவாக குறைந்துவிட்டது என்றும் அங்கு உள்ள 90% க்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது