1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

ஒரு மனையை கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியமா...?

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மனை எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது. அந்த மனையானது எந்த திசையை நோக்கி வீடு கட்ட  வேண்டும்.
எந்த திசையில் வாசல் இருக்க வேண்டும், என்னென்ன திசையில் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும், என்ற கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் படி ஒரு மனையை  கட்டினால் தான், அந்த வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகளவு இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.
 
வாஸ்து மூலைகள்:
 
வாஸ்து பூஜை அறை நாம் புதிதாக வீடு கட்டும்போது, தெய்வங்களை வழிபடவேண்டும் என்று தனியாக பூஜை அறை ஒன்றை கட்டுவோம். அந்த பூஜை அறை எங்கு இருக்கவேண்டும் என்றால், பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த  இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்றுஆன்றோர்கள் பலர் சொல்கின்றார்கள். அதன் படி பார்த்தால் சூரியன் கிழக்கு திசையில் தான் உதயமாகிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் வாஸ்து பூஜை அறை அமைப்பது வாஸ்து படி விஷேசம்  ஆகும்.
 
பொதுவாக வடகிழக்கு மூலையில் வாஸ்து பூஜை அறை தவிர வேறு எந்த அறையும் இருக்க கூடாது. அப்படி வேறு  ஏதாவது அறைகள் இருந்தால் அந்த அறையில் தங்குவது நல்லது அல்ல.