வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (13:55 IST)

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.  

 
சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும்.   
 
எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.   
 
 * ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.     
 
 * ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.