1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு

என்னவெல்லாம் செய்ய முடியாது

என்னவெல்லாம் செய்ய முடியாது
யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.

பன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.

முதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.

தட்டான் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா. அவற்றிற்கு ஒரு அதிசயம் உண்டு. என்னவென்றுத் தெரியுமா அவை பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.

முதலைகளும், திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.
About Writer
Webdunia