1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (13:44 IST)

எல்லாம் முடிந்தது... ரசிகர்களை பதறவைத்த தொகுப்பாளினி அஞ்சனாவின் அதிரடி பதிவு!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " It's Over  என கூறி இன்று 25 ஆவது நாள். எல்லாம் முடிந்தது.  என்னுடைய நேரம் காலம் எல்லாவற்றையும் செலவழித்து வீட்டில் இருந்த அத்தனை வேலைகளுக்கு இடையிலும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டேன். அதற்கெல்லாம் அவ்வளவு வரவேற்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவில்லை நன்றி. ஆனால், இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான் இதற்கு அடிமையாகிவிடுவேன் எனவே இத்துடன் முடித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அப்படி ஒரு தவறை மட்டும் செய்துவிடாதே அஞ்சனா... ப்ளீஸ் உன் பூ முகத்தை பார்க்காமல் எங்களுக்கு பொழுதும் விடியாது. பொழுதும் போகாது என பாச மழை பொழிந்து வருகின்றனர்.