வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஏப்ரல் 2021 (12:59 IST)

இன்னிக்கி மரங்கள் கூட அழுகிறது – கலங்கி அழுத சூரி

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார் என்றும் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 15 அம் தேதி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இதனிடையே அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் காமெடி நடிகர் சூரி, அண்னன் விவேக்கினால் சிரித்து சிந்தித்த கோடிக்கணக்கான மனங்கள் மட்டுமில்லை. விழிப்புணர்வுக்காக நடப்பட்ட கோடிக்கணக்கான மரங்கள் கூட இன்னைக்கு அழுதுகிட்டு இருக்கு என கண்ணீருடன் பேட்டியளித்தார்.