ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:00 IST)

வருங்கால மாமனாருக்கு உருகி உருகி வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்… வைரல் புகைப்படம்!

இயக்குனர் விக்னேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் உள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இப்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய வருங்கால மாமனாரும் நயன்தாராவின் தந்தையுமான குரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.  அதில் ‘ஹேப்பி பர்த்டே அச்சன்…நீங்கள் சிரிப்பது, சாப்பிடுவது.. எங்களை பார்ப்பது எல்லாம் மகிழ்ச்சியான விஷயங்கள். உங்களின் இருப்பு எங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றுகிறது. கடவுள் உங்களுக்கு பலமும் ஆற்றலும் கொடுத்து எங்களோடு காலாகாலத்துக்கும் இருக்க வைக்க வேண்டும். லவ் யூ அச்சு… நீங்கள்தான் எங்கள் ஆசி’ என உருக்கமாகக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக தனது தந்தை உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருதாக நயன்தாரா ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.