வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (11:19 IST)

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி?! – காரணம் என்ன?

தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் வைரமுத்து. பல பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ள இவர் கவிதை தொகுதிகள், நாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள வைரமுத்து பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் அவருக்கு இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.