1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (09:20 IST)

புலி பாடல்கள் வெளியீட்டுவிழா - விஜய்யை மேடைக்கு ஓட வைத்த டி.ஆர்.

புலி படத்தின் பாடல்கள் நேற்று மகாபலிபுரத்தில் வெளியிடப்பட்டது. விழாவில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, நந்திதா, இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தயாரிப்பாளர் தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யின் மனைவி சங்கீதா, இயக்குனர்கள் தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜீவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலகலப்பாக நடந்த இந்த விழாவில் ஸ்ருதி, புலியில் இடம்பெற்ற ஏண்டி ஏண்டி பாடலை பாடினார். படத்திலும் இந்தப் பாடலை அவர்தான் விஜய்யுடன் இணைந்து பாடியிருக்கிறார். 
 
விழாவின் ஹைலைட் என்றால் அது டி.ஆரின் பேச்சு. என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என்பது தெரிந்தும் விஜய் உதவி செய்தார் என்று, வாலு படம் வெளிவருவதற்கு விஜய் எடுத்துக் கொண்ட முயற்சியை டி.ஆர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அவர் விஜய்யை வாழ்த்திப்பேச, கூட்டம் ஆரவாரத்தில் அரங்கை அதிர வைத்தது. ஒருகட்டத்தில் விஜய் ஓடிச் சென்று டி.ஆரை கட்டி அணைத்து அவரது உணர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றார். 
 
டி.ஆர். உணர்ச்சியின் பெரும் ஊற்று. விஜய்யின் முயற்சிக்குப் பிறகும் கொஞ்ச நேரம் பீறிட்ட பிறகே அடங்கினார். நேற்றைய நிகழ்வை டி.ஆரின் உணர்ச்சிகரமான பேச்சு, விஜய்க்கும், பார்வையாளர்களுக்கும் மறக்க முடியாத நாளாக்கியது என்றால் மிகையில்லை.