1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (22:28 IST)

’’மன்னிப்பு கேட்கனும்!’’சூப்பர் ஸ்டாரை சீண்டிய தலைவி பட ஹீரோயின்!

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார் நடிகை கங்கணா ரணாவத்.

சமீபத்தில் மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ஆர்யன் கானுக்கு ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் முன்னணி நடிகை  கங்கனா ரணாவத் மறைமுக முகமாக ஷாருக்கானை விமர்சித்துள்ளார். அதில், க்டந்த 2014 ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஜாக்கிசானின் மகன் கைது செய்யப்பட்டபோது,  ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அதனால் ஜாக்கிசானின் மகன் 6 மாதம் சிறையில் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா இவ்வாறு கூறியுள்ளது ஷாருக்கானும் தன் மகனின் செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவதுபோல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.