1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:54 IST)

அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டிங்… ரசிகர்கள் கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு விதித்த தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் பேசிய ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேச்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், இத்தனைப் பேரை பலிகொண்ட ஸ்டெர்லைட் மீண்டும் ஆலையை திறக்கக் கூடாது. இதுக்கும் மேல ஆலையை திறக்கனும்னு நினைத்தால் அவங்கள மனுஷங்களே கிடையாது. மக்கள் சக்தி ஜனசக்தி ஜெயிக்கும் என தெரிவித்தார்.

இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.