1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (08:09 IST)

இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே… சீரியல்களின் நேரத்தைக் குறைத்த தொலைக்காட்சிகள்!

கொரோனா லாக்டவுன் காரணமாக சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மற்றும் கிழமைகள் குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சினிமா படப்பிடிப்புகளும் அடக்கம், இந்நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி கேட்டு பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் இப்போது எபிசோட் பற்றாக்குறைகளை சமாளிக்க தொலைக்காட்சிகள் திங்கள் முதல் சனி வரை என்று இருந்த ஒளிபரப்பு கிழமைகளை திங்கள் முதல் வியாழன் வரை என்று குறைத்துள்ளன. மேலும் நேரத்தை 24 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் எனவும் குறைத்துள்ளனர். இந்த நான்கு நிமிடத்தை ஈடுகட்ட முந்தைய எபிசோட்களின் கதைசுருக்கம் மற்றும் டைட்டில் பாடல்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளனராம்.