1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (11:44 IST)

மீண்டும் படம் இயக்கும சுரேஷ் காமாட்சி… வெற்றிமாறன் பாணியில்!

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முற்றாத இரவொன்றில் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு படமொன்றை இயக்க உள்ளார்.

அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, அதன் பின்னர் மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. அதையடுத்து அவர் இப்போது சிம்புவின் மாநாடு மற்றும் இயக்குனர் ராம் இயக்கும் புதிய படம் ஆகிவற்றை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் மா. காமுத்துரை எழுதிய முற்றாத இரவொன்றில் என்ற நாவலை படமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த படத்தை அவரே இயக்க உள்ளார்.