வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (17:40 IST)

இதைச் செய்தால் போலீஸ் நடவடிக்கை...சூப்பர் ஸ்டார் எச்சரிக்கை !

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவான ராதே படத்தின் பைரசி இணையதளத்தில் பரவிவருவதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்தனர்.

இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலை
காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மே 13 ஆம் தெதி ஜீ5 ஓடிடி தளத்திலும், திரையரங்குகள் திறக்கப்பட்ட இடங்களில் 750 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.

 
இந்நிலையில் ராதே படம் இப்படத்தைப் பார்க்க ஜீ பிளஸில் சுமார் ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. முதல் நாளன்று இப்படத்ஹ்டை 42 லட்சம் ஏர் பார்த்துள்ளனர். மேலும், இப்படம் வெளிநாட்டில்; நல்ல வசூல் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் , திஷானி பதானி நடிப்பில் உருவாகியுள்ள ராதே படத்தின் பைரவி இணையதளத்தில் அதிகளவில் பரவிவருகிறது.

இதனால் சூப்பர் ஸ்டார் சல்மான் உள்ளிட்ட ராதே படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் சல்மான் கான் கூறியதாவது: சட்டத்திற்குப் புறம்பாக ராதே படத்தின் பைரவி இணையதளத்தில் பரவிவருகிறது. இதுபற்றி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  எல்லோரும் பார்க்கக்கூடிய ரூ.249 கட்டணத்தில்தான் இப்படம் வெளியாகியுள்ளது. எனவே யாரும் இப்படத்தை பைரசியில் பார்க்க வேண்டாம்..இதைமீறிப் பார்த்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.