1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 11 மார்ச் 2020 (14:42 IST)

மாநாடு சிம்புவிற்கு வில்லனாகும் சூர்யா - வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.


இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். பின்னர் படப்பிடிப்பிற்கான வேலைகள் மும்முரமாக துவங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முடித்த கையோடு படக்குழு ஆந்திராவில் படத்தை எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது சிம்பு ரசிகர்களுக்கு ஓர் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அடுத்தகட்ட படப்பிடிப்பில் இதில் கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், மனோஜ் பாரதிராஜா, பிரேம் ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.