வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (12:29 IST)

கடல் கன்னியாக உருவெடுத்த ஸ்ரேயா... தண்ணீருக்குள் தாராள போஸ்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.   தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகிறார்.

அந்தகையில் தற்போது தண்ணீருக்குள் மிதந்தபடி செம கூல் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரையும் கட்டி இழுத்துள்ளார். வசீகரிக்கும் உடல் அழகை கொண்ட ஸ்ரேயா இந்த புகைப்படத்தில் கடல் கன்னியையே மிஞ்சிவிட்டதாக வர்ணித்து வருகின்றனர் ரசிகர்கள்.