1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (15:25 IST)

மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் பரிதாப மரணம்!

மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட இயக்குனர் பரிதாப மரணம்!
சென்னையில் மதுபோதையில் பிரியாணி சாப்பிட்ட குறும்பட இயக்குனர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 குறும்படங்களை இயக்கி வந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் நேற்று மதுபோதையில் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்ற அவர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
 
பிரியாணி உட்கொண்ட பின்னர் அந்த உணவு விஷமாக மாறியதா? அல்லது அவருக்கு ஏற்கனவே உடல்நிலை கோளாறு இருந்ததா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.