1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (09:40 IST)

ரூ. 10 லட்சம் பணப்பெட்டியுடன் ஷிவின் வெளியேறினார் - அப்போ வின்னர்....?

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 
 
இதில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் கொடுப்பட்டு ஒவ்வொருவராக பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி வருகிறார்கள். கடைசியாக கதிரவன் 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். 
 
அதையடுத்து தற்போது ஷிவின் ரூ. 10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் தாங்கள் எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஷிவின் வின்னர் ஆகுவார் என ஒரு கூட்டம் நம்பி இருந்த வேளையில் அவர் தற்போது பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பது போட்டியின் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.