1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (09:34 IST)

நம்ம படங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுப்போம்ல… வாரிசு சர்ச்சையில் சந்தானத்தின் கருத்து!

வாரிசு படத்துக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக ஒரு சர்ச்சை கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைவருக்குமான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் தெலுங்கில் வாராசடு என்ற பெயரில் சங்கராந்தி(பொங்கலின் போது) பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தில் ராஜு முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கராந்தியை முன்னிட்டு நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவைக் காட்டி வாரிசு தெலுங்கில் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆவதை தடுக்க முற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி பல்வேறு கருத்துகள் பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் சந்தானம் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ”நம்ம தாய் மொழி படங்களுக்கு நாம முக்கியத்துவம் கொடுப்போம்ல… அதுபோலதான் அவர்களும் அவங்க படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க” எனக் கூறியுள்ளார்.