கோச்சடையான் திரையிடலை புறக்கணித்த ரஜினி
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கோச்சடையான் படமும் திரையிடப்பட்டது. இதில் ரஜினி கலந்து கொள்வார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
கோச்சடையான் திரையிடுவதற்கு முதல்நாள் இதே விழாவில் ரஜினிக்கு 2014 -ஆம் ஆண்டின் சிறந்த திரை பிரபலத்துக்கான விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டவர் மறுநாள் கோச்சடையான் திரையிடலுக்காக காத்திருக்காமல் உடனே கோவாவிலிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
கோச்சடையான் திரையிடலில் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின், லதா ரஜினிகாந்த் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர்.