1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (09:23 IST)

அரசியல் இப்போது இல்லை; சொல்லாமல் சொல்லும் ரஜினி – ரஜினி 167 அப்டேட் !

ரஜினி முருகதாஸ் இயக்கத்தில் ஒருப் படத்தில் நடிக்க இருக்க அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மற்றொருப் படத்திலும் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் ரிலிஸான 2.0 மற்றும் பேட்ட ஆகிய இரண்டுப் படங்களும் தமிழக அளவில கலவையான விமர்சனங்களையும் சுமாரான வசூலைப் பெற்றாலும் உலக அளவில் வசூல் சாதனை செய்துள்ளன. சமீபத்தில் 2.0 படம் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் தமிழக அளவில் ரஜினி இப்போது நம்பர் 1 இடத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. 2.0 படத்தின் தமிழக வசூல் சர்கார் வசூலை நெருங்க முடியவில்லை என்றும் பொங்கலுக்கு விஸ்வாசத்தோடு ரிலிஸான பேட்ட வசூலில் இரண்டாமிடத்திலேயே சொல்லப்படுகிறது. ஆனால் உலக அளவில் வசூல் சாதனைப்படைக்கும் தமிழ்ப்படங்களில் ரஜினியின் படங்களே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன.

இதனால் ரஜினி அடுத்தடுத்து திறமையான இயக்குனர்களோடு இணைந்து வரிசையாகப் படங்கள் கொடுக்க இருக்கிறாராம். பேட்ட படத்தை அடுத்து ரஜினி இப்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதனை லைகா தயாரிக்க இருக்கிறது. இதையடுத்து உடனடியாக மறுபடியும் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அதன் இயக்குனராக ராஜமௌலி இருக்க வேண்டும் என ரஜினி ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் பிஸியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வருகிறேன் என சொல்லி இருக்கிறாராம்.

அதனால் குறுகிய காலத்தில் பேட்ட படம் போல ஒருப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதனால் பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜையையே ஒருப் படம் இயக்கித் தர அனுகியுள்ளார். இந்த படம் இப்போதைக்கு ரஜினி 167 என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

வரிசையாக இப்படிப் படங்களில் கமிட் ஆகி வரும் ரஜினி இப்போதைக்கு அரசியலில் கவனம் செலுத்தப் போவதில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.