1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2016 (10:17 IST)

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - நடிகர் மாதவன் மீது வழக்கு

வாய்க்கால் ஆக்கிரமிப்பு - நடிகர் மாதவன் மீது வழக்கு

நடிகர் மாதவனுக்கு கொடைக்கானலில் 4.88 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் வழியாகத்தான் கொடைக்கானல் ராஜவாய்க்கால் செல்கிறது.


 


இதுதான் இப்போது மாதவனுக்கு பிரச்சனையாக முளைத்துள்ளது.
 
திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் என்பவர் மாதவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை மாதவன் ஆக்கிரமித்திருப்பதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இத்தனைக்கும் ராஜவாய்க்கால் இப்போது பயன்பாடு இல்லாமல் உள்ளதாக செயற்பொறியாளர் கலெக்டரிடம் அறிக்கை அளித்துள்ளார். அப்படியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை 11 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.