1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:38 IST)

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

venkat
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜீவா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை பிரியாமணி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி இந்த படத்தில் இணைந்து இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva