மீண்டும் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்கில் அஜித்…!
நீண்ட இடைவெளுக்குப் பிறகு இந்த ஆண்டில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாகின்றன. இதில் விடாமுயற்சி பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, வசூலிலும் சுணக்கம் கண்டது. இதையடுத்து குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் அஜித்துக்கான ஷூட்டிங் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இன்னும் ஒரு நாள் மட்டும் அஜித் நடிக்க வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஐரோப்பாவில் இருக்கும் அஜித் இந்தியா வந்து நடிப்பாரா அல்லது படக்குழு அங்கு சென்று படமாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.