ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (16:59 IST)

மீண்டும் ஜெயம் ரவியோடு இணையும் நயன்தாரா! எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஜன கன மன திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ஜனகணமன’. இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை  ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்த படத்துக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று இயக்குனர் அகமது படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் கொரோனா காரணமாக மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்த இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இப்போது டாப்ஸி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஜெயம் ரவி நயன்தாரா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.