வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (11:24 IST)

அந்த படம் மட்டும் நல்ல படமா? பலான படத்தின் இயக்குனரின் கேள்வி!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை படு ஆபாசமாக எடுத்துள்ள இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் அதைப் பற்றி பேசியுள்ளார்.

ஜெயக்குமார் இயக்கத்தில் பி கிரேட் படத்தைப் போல உருவான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்  கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை இன்று மாலை வெளியாக உள்ளன. இதை அறிவிக்கும் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.

அவையெல்லாம் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் ஆபாசமான படம் என்று சொல்லப்படும் தன் படத்தைப் பற்றி இயக்குனர் சந்தோஷ் ‘இது பெரியவர்களுக்கான படம் என்று சொல்லிதான் வெளியிடுகிறோம். குழந்தைகள் பார்க்க கூடிய படம் இல்லை. அப்படி பார்த்தால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா கணவனுக்கு தெரியாமல் இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வது போல காட்சிப்படுத்தி இருப்பார்கள். அது எல்லாம் சமுதாய சீர்கேடு இல்லையா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.