1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (09:15 IST)

பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு பிறகு ட்ரோல் ஆகும் கீர்த்தி சுரேஷ்… என்ன காரணம்?

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பட ரிலீஸூக்கு பிறகு நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது பொன்னியின் செல்வன். வார இறுதிநாட்களைக் கடந்துள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அரங்கு நிரம்பிய காட்சிகளாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் இப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் குந்தவையாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காதது குறித்து மீம்களும் ட்ரோல்களும் பரவி வருகின்றன. முதலில் மணிரத்னம் குந்தவை கதாபாத்திரத்துக்கு கீர்த்தியைதான் அணுகினார். ஆனால் அவர் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இந்த வாய்ப்பை மறுத்ததாக தகவல்கள் அப்போது வெளியாகின. அண்ணாத்த படம் கடந்த ஆண்டு வெளியாகி படுதோல்வி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.