1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:10 IST)

காந்தாரா சாப்டர் 1 ஷூட்டிங்குக்காக வெளிநாடு பறக்கும் படக்குழு!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் இலங்கையின் வனப் பகுதிகளில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு ஷூட்டிங் முடிந்த பின்னர் கர்நாடகாவின் உடுப்பியில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்கும் என சொல்லப்படுகிறது.