வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (14:34 IST)

பிரபல தயாரிப்பாளரால் பாலியல் தொல்லை; இளம்நடிகை புகார்

பிரபல பட தயாரிப்பாளர் சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரபல கன்னட நடிகை புகார் அளித்துள்ளார்.


 

 
கன்னடத்தில் ரங்கீதா ரங்கா என்ற படம் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் அவந்திகா ஷெட்டி. இவர் தற்போது கன்னட பட தயாரிப்பாளர் சுரேஷ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
 
கன்னட ஃபிலிம் சேம்பரில் இதுகுறித்து நடிகை அவந்திகா, பட அதிபர் சுரேஷ் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அவரிடம் தகராறில் ஈடுப்பட்டேன். அதை காரணமாக வைத்து என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார் என புகார் அளித்துள்ளார்.
 
இதுகுறித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர், துணைத் தலைவர் உமேஷ் பனாகர் கூறியதாவது:-
 
இந்த புகார் குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷிடம் விசாரணை நடத்தப்படும். அவர் ஏதுவும் அவந்திகா மீது குறை கூறினால். அவந்திகாவையும் அழைத்து பேசுவோம் என்றார். மேலும், இதுகுறித்து பட அதிபர் சுரேஷ், கன்னட நடிகர்கள் சங்கத்தில் அவந்திகா உறுப்பினரே கிடையாது என தெரிவித்துள்ளார்.