வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஜூலை 2021 (12:32 IST)

நதிகளில் நீராடும் சூரியன் படத்தில் ஒப்பந்தமான எழுத்தாளர் ஜெயமோகன்!

எழுத்தாளர் ஜெயமோகன் நதிகளில் நீராடும் சூரியன் படத்துக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு செல்வது தாமதமானது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசனகர்த்தாவாக ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கௌதம் மேனனின் திரைப்படத்தில் மற்றொருவர் வசனம் எழுதுவது இதுவே முதல் முறை.