வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2016 (13:17 IST)

இப்படித்தான் உருவானது காற்று வெளியிடை பாடல்

மணிரத்னம் படத்தின் தகவல்களை அவர் வெளியிட மாட்டார். அவரது படங்களுக்கு பாடல் எழுதும் வைரமுத்து அவ்வப்போது மணிரத்னம் படங்கள் குறித்த செய்தியை வெளியிடுவார். காற்று வெளியிடை படம் குறித்த முதல் அதிகாரப்பூர்வ செய்தி வைரமுத்துவிடமிருந்துதான் வந்துள்ளது.


 
 
காற்று வெளியிடை படத்தில் இடம்பெறும் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
 
"காற்று வெளியிடை படத்தின் ஐந்தாம் பாடல் நேற்று நிறைவுற்றது. மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் என்ற கனிந்த கலைஞர்களோடு தொழிற்படுவது ஒரு தனி சுகம்.
 
நேற்று மாலை 4 மணிக்குக் கூடினோம்;
6 மணிக்கு மெட்டு இறுதியானது,
8 மணிக்குப் பாட்டு உறுதியானது,
இரவு 12 மணிக்கு ஒலிப்பதிவு நிறைந்தது.
 
என்ன லயம், என்ன நயம்.
 
பிரிவின் வலி சொல்லும் நினைவின் பாடல் அது. ஒரு வரி சொல்லட்டுமா?
 
அன்பே நான் அலைபோல
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
உன்பேரைக் கூவுகிறேன்..."
 
- இவ்வாறு ட்விட்டரில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.