1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (11:47 IST)

அண்ணனுக்கே ஆப்பு வச்ச ஜெயம்ரவி? சிக்கலில் தனி ஒருவன் -2!

தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான மோகன் ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். 
 
அவரது தம்பி ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது. அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவு செய்திருந்தது. 
 
ஆனால், ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2 படத்தில் பிசியாக இருப்பதால் அவரால் கால்சீட் கொடுக்க முடியவைல்லையாம். இதனால் தனி ஒருவன் திரைப்படம் உருவாக்குவதில் காலதாமதம் ஆகிறது. இந்த கேப்பில் தான் ராஜாவும் தெலுங்கு படங்களை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி ஓகே எப்போ சொல்லுவார் என அண்னன் காத்திருப்பது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.