1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (09:31 IST)

”எப்போதும் என் அன்பு மாறாது”… இளையராஜா சொன்ன அட்வைஸும் பகிர்ந்த பாடலும்!

சமீபத்தில் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா இளையராஜாவை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர் ” மேஜிக்கலான, மியுசிக்கலான ஒரு நண்பகல். எப்போதும் இளையராஜாவோடு நேரம் செலவிடுவது மகிழ்ச்சியான விஷயம். Work mode on” எனக்கூறியுள்ளார். இதனால் இளையராஜா ஐஸ்வர்யா ரஜினியின் படத்துக்கு இசையமைக்க உள்ளாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்த சந்திப்புக் குறித்து இளையராஜா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ”உன்னை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. வாழ்க்கையில் எல்லாமே கண்டிப்பாக மாறும். என் அன்பைத் தவிர… கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” எனக் கூறி ‘ everything must change’ என்ற பாடலைப் பகிர்ந்துள்ளார்.