1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:02 IST)

அந்தக் காட்சியில் நடிக்கும்போது அழுதுவிட்டேன் - விஜய் சேதுபதி பட நடிகை

அருவி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை அதிதிபாலன்.இவர், ஒரு காட்சியில் நடிக்கும்போது அழுதுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அருவி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அதிதிபாலன். அதன்பின் இவர் விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில்,  குட்டி ஸ்டோரில் படத்தில் நீண்ட இடைவெளி விட்டு நடித்திருந்தேன். ஏனென்றால் நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். 

எனக்கு வந்த கதைகளும் எனக்குப் பிடிக்கவில்லை… இந்நிலையில் நலன் குமாரசாமி கூறிய கதை எனக்குப் பிடித்திருந்தது.

அதனால் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தேன். விஜய் சேதுபதியுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது சற்று சிரமமாக இருந்தது. அப்போது நான் அழுதுவிட்டேன்

விஜய் சேதுபதி அனுபவம் மிக்கவர் என்பதால் அவரால் இயல்பாக நடிக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.