வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 மார்ச் 2018 (16:42 IST)

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு குரல் கொடுத்திருக்கும் பிரபல இசையமைப்பாளர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நடிகரும், இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் தற்பொழுது ஆதரவு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை மூட வேண்டும் என்ற் போராட்டக்காரர்கள் கூறி வரும் நிலையில் அந்த ஆலையை புதுப்பிப்பது மட்டுமின்றி இன்னொரு ஆலைக்கும் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
இதனையடுத்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பின்னால் எதையும் தடுக்க முடியாது என்பதை உணர மறுத்தால் "விபரீத" விளைவுகளுக்கு யார் பொறுப்பு..? என்று கூறியிருக்கிறார்