1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (16:08 IST)

செல்வராகவனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா...

செல்வராகவனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இந்தப்  படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி என நிறைய பேர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
 
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். தெலுங்கில் ‘கேங்’ என்ற  பெயரில் ரிலீஸாகும் இந்தப் படம், கேரளாவிலும் ரிலீஸாகிறது. எனவே, கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில்  நேற்று கலந்து கொண்டார் சூர்யா.
 
அப்போது பேசிய சூர்யா, “இந்தப் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறேன். ஒரு வருடமாக நாங்கள் இருவரும் பேசி உருவான படம் இது. அதைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அதைப்பற்றி பேசலாம்” எனத் தெரிவித்துள்ளார்.