1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (18:58 IST)

ராஷ்மிகாவை பார்க்க 900 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொண்ட ரசிகர்!

நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகரான ஆகாஷ் திரிபாதி என்பவர் அவரை பார்க்க தெலங்கானாவில் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஷ்மிகாவின் தீவிர ரசிகரான ஆகாஷ் திரிபாதி என்பவர் தெலங்கானாவில் இருந்து கர்நாடகாவில் உள்ள ராஷ்மிகாவின் வீட்டுக்கு முகவரி கேட்டுக்கொண்டே கர்நாடகாவை அடைந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் போலிஸார் சந்தேகப்பட்டு அவரை விசாரிக்க அவர் விஷயத்தைக் கூறியுள்ளார். அதன் பின்னர் ராஷ்மிகா இப்போது கர்நாடகாவில் இல்லை மும்பையில் இருக்கிறார் எனக் கூறி அவரை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.