வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (11:01 IST)

நானே வருவேன் அப்டேட்… இரட்டை வேடத்தில் தனுஷ்!

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சில நாட்களில் கலந்துகொள்ள உள்ளார் தனுஷ்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மற்றும் கதை ஆகியவை மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடைசியாக பட்டாஸ் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தார். அதற்கு முன்னர் கொடி படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். அந்த இரண்டு படங்களுமே அட்டர் ப்ளாப் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.