செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (09:13 IST)

மீண்டும் தொடங்கிய தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஷூட்டிங்!

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில் இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் காட்சிகளைப் படமாக்கி வருகிறாராம் தனுஷ்.