1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:21 IST)

இயக்குனர் தேசிங் பெரியசாமியின் அடுத்த படம்… கைகோர்க்கும் முன்னணி தயாரிப்பாளர்!

2020 ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி.

துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது தேசிங் பெரியசாமிதான் என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே போல விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவல் இதை எல்லாவற்றையும் மறுத்து தேசிங், அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனைதான் இயக்க போவதாக சொல்லப்படுகிறது. இதில் எதில் உண்மை என்பது அவரே அறிவித்தால்தான் உண்டு.

இந்நிலையில் இப்போது தேசிங் பெரியசாமியின் அடுத்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தாணு ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளனர்.