1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 டிசம்பர் 2021 (23:46 IST)

இலவசமாக துணிகள் தைத்து தரப்படும்…சோனு சூட்டின் ரசிகருக்கு குவியும் பாராட்டுகள்

இந்தி சினிமாவில் பிரபல நடிகர் சோனு சூட். இவர் கடந்தாண்டு கொரொனா ஊரடங்கின் போது ஏழை, எளிய மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவுக்கு விமானத்தில் வருவதற்கும், விவசாயிகளும், படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும் வழங்கி உதவி செய்தார். அதனால் அவருக்கு கோயில் கட்டி அவரைக் கடவுளாகவும் மக்கள் வணங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத் நகரில் ஒரு டைலர் தனது தையல் கடையின் பெயர்ப் பலகையில் மக்களுக்கு உதவி வரும் சோனு சூட்டின் புகைப்படத்தை வைத்து, ஏழை, எளிய  மக்களுக்கு இலவசமாக துணிகள் தைத்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.