1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2016 (18:33 IST)

கலைபுலி எஸ்.தாணுவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பு ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தொடர்ந்துள்ளார்.
 
அதில் திரைப்பட தயாரிப்பாளர் தாணு தனக்கு 2 லட்சம் ரூபாய் தரவேண்டும். ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம், 2 லட்சம் ரூபாயும் அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைபுலி தாணு வழங்கவேண்டும் என்று நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
 
ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில் உள்ளன. தற்போது பல கோடி ரூபாய் செலவு செய்து ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எனவே, வசதி இருந்தும் பணம் தராத தாணுவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கணேசன், கலைபுலி தாணுவை வருகிற 28ஆம் தேதிக்குள் காவல் துறையினர் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.