1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (16:32 IST)

கொரொனா 2வது அலை...ரஜினியின் ’அண்ணாத்த’ ஷூட்டிங் நடக்குமா??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’அண்ணாத்த’ படத்தில் ஜெகபதி பாபு இணைந்துள்ளார் என்று அறிவித்தது. பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜகபதி பாபு ’இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவிவருவதால் சாதாரண மக்கள் முதல், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்,  சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகளின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளதால், ரஜினியின் அண்ணாத்த படப் பிடிப்புகளும் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் ஜெகபதிபாபு கொரோனா முடிவடையும் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் குறிப்பிட்ட தேதியில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்து தியேட்டருக்கு வருமா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.