ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (12:27 IST)

உலக திரைப்பட வரலாற்றில் இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளிவரவிருக்கும் "கிளவர்"திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!.

கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர் டெய்ன்மெண்ட்  நிறுவனம் சார்பில் "கிளவர்" திரைப்படத்தை திப்பம்மாள் தயாரித்துள்ளார்.
 
தேவர் பிலிம்ஸ் படங்களிலும் இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு முதலான விலங்குகள் நடித்து பல படங்கள் திரைக்கு வந்துள்ளது. 
 
அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்கள் மட்டுமே வந்துள்ளது.
 
சிறிய இடை வெளிக்கு பிறகு கிளவர் என்ற படம் உருவாகி உள்ளது. 
 
இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. 
 
மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள இந்தப் படத்திற்கு வாசு  ஒளிப்பதிவையும்  முத்து முனியசாமி படத்தொகுப்பையும், ரகுநாத் இசையையும் , தீபக்கார்த்திகேயன் , சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.
 
இந்த படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
 
அப்போது பேசிய  படத்தின் இயக்குனர் செந்தில்குமார்:
 
உலக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். 
 
அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்றுவிடுகிறான். தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும்,திரில்லும் கலந்து படத்தை டைரக்ட் செய்துள்ளேன். 
 
புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை.  கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி என் முதல்  படமான கிளவர் படத்தை இயக்கி உள்ளேன். 
 
இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது என்றார்.