சார்மி சூடுபட்ட பூனையல்ல... புலி
ஒருமுறை சூடுபட்டதற்காக ஒதுங்கிச் செல்ல சார்மி ஒன்றும் பூனையில்லையே? தான் ஒரு புலி என்பதை தனது செயல் மூலம் நிரூபித்திருக்கிறார்.
நடித்து சம்பாதித்த பணத்தை, ஜோதிலட்சுமி என்ற படத்தை தயாரித்து கரியாக்கினார் சார்மி. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில் சார்மியே நாயகியாக நடித்திருந்தார்.
படம் பிளாப். இனிமேல் சார்மி படம் தயாரிக்க மாட்டார். அந்தளவுக்கு, ஜோதிலட்சுமி அவருக்கு பாடம் கற்பித்திருக்கிறது என்றனர் ஆந்திராவில்.
ஆனால், சார்மி என்ன சாதாரண ஆளா? விட்ட இடத்தில்தான் தேட வேண்டும் என்ற கொள்ளைப்படி, மீண்டும் படம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார். இதில் இடறுகிற ஒரே அம்சம், ஜோதிலட்சுமியை பிளாப்பாக்கிய பூரி ஜெகன்நாத்தான் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
எதையும் தாங்கும் இதயத்துடன் பேங்க் பாலன்சும் சார்மியிடம் இருக்கையில் நமக்கு ஏன் கலக்கம். ஜமாய்ங்க சார்மி.