1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (09:32 IST)

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா! – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நீடித்து வரும் நிலையில் கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் கூட அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் குறைந்திருந்த கொரோனா தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அக்‌ஷய்குமார் தமிழில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.

தற்போது அவரது ப்ரித்விராஜ் படம் வெளியாக உள்ள நிலையில் கொரோனா உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.